Tamilவிளையாட்டு

வீரரரை ஆபாசமாக திட்டிய இங்கிலாந்து கீப்பர் பட்லருக்கு அபராதம்!

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. போட்டியின் ஐந்தாவது நாளில் தென்ஆப்பிரிக்கா போட்டியை டிரா செய்ய போராடியது.

கடைசி விக்கெட்டாக பிலாண்டர் களம் இறங்கினார். அவரை இங்கிலாந்து கீப்பர் ஜோஸ் பட்லர் ஆபாசமாக திட்டினார். இது ஸ்டெம்பில் இருந்த மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.

விசாரணையில் ஜோஸ் பட்லர் அவர் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனால் அவருக்கு போட்டிக்கான சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *