Tamilசினிமா

விளையாட்டு வீராங்கனையுடன் 2வது திருமணமா? – விஷ்ணு விஷால் விளக்கம்

நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான நடராஜின் மகளான ரஜினியை கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்த விஷ்ணு விஷால் கடந்த ஆண்டு மனைவியை விவாகரத்து செய்தார்.

பிறகு ‘ராட்சசன்’ படத்தில் ஜோடியாக நடித்த அமலாபாலும் அவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வதந்தி பரவியது.

இதனை விஷ்ணு விஷால் மறுத்தார். இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் இருக்கும் ‘செல்பி’ படங்களை விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

’நீண்ட நாள்களாக எங்களுக்குள் பழக்கம் உள்ளது. இருவருக்கும் பொதுவான நண்பர்கள் பலர் உள்ளனர். எனவே நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை செலவிடுவோம். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். இதற்கு மேல் இப்போது எதுவும் கூறமுடியாது. இருவருக்கும் நிறைய பொறுப்புகள் உள்ளன’. இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *