Tamilவிளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் – 3வது சுற்றுக்கு முன்னேறிய ரபெல் நடால்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், லிதுவேனியா வீரர் பெரான்கிசை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு சுற்றில் 5-ம் நிலை கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனுடன் மோதினார். இதில் 6-2, 6-3, 7-5 என்ற நேர்செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்.