Tamilவிளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் – பெடரர் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்சிலாம் போட்டியில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

உலகின் 6-ம் நிலை வீரரும், 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை படைத்தவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) தொடக்க சுற்றில் பிரான்சை சேர்ந்த அட்ரியன் மனாரினோவை எதிர் கொண்டார்.

இருவரும் தலா 2 செட்டுகளை கைப்பற்றி இருந்தனர். முடிவை நிர்ணயம் செய்யும் 5-வது செட்டில் மனாரினோ காயத்தால் விலகினார். இதனால் பெடரர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அவருக்கு அதிஷ்ர்டம் இருந்தது.

மற்ற ஆட்டங்களில் 2-ம் நிலை வீரரான மெட்வதேவ் (ரஷ்யா), 4-வது வரிசையில் உள்ள சுவரேவ் (ஜெர்மனி) வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் முதல் நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா), மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.