விபத்தில் சிக்கிய மஞ்சிமா மோகன்!

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவர் சில நாட்களாக தன்னுடைய சமூக வலைத்தளங்களில் எந்த பதிவிடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை நடைபெற்று ஒய்வில் இருப்பதாக மஞ்சிமா மோகன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன் ஓர் விபத்து நடந்ததாகவும், காலில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சை பெற்று, ஒரு மாதத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று மஞ்சிமா மோகன் கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools