Tamilசினிமா

வரநாடு நிலச்சரிவு – நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம் நன்கொடை

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

இந்த நிலையில், கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக நடிகை நிகிலா விமல் ஈடுபட்டார். தொடர்ந்து, நடிகை சூர்யா, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். முன்னதாக, நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.