Tamilசெய்திகள்

வசந்தபாலனின் ‘ஜெயில்’ படத்தை கைப்பற்றிய ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்

ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த பாலன். இதையடுத்து இவர் இயக்கிய ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இவர் இயக்கிய வெயில் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து இவர் இயக்கத்தில் உருவான படம் ஜெயில், ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார்.

மேலும் நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒருசில காரணங்களால் இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் முடங்கி உள்ளது.

இந்நிலையில், ஜெயில் படத்தின் முக்கிய அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டு உள்ளார். அதன்படி இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.