வங்காளதேச அணிக்கு அரசு சார்பில் வரவேற்பு

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி முதல்முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது. கோப்பையை வென்ற வங்காளதேச அணியினருக்கு அரசு சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வங்காளதேச அணி நாடு திரும்பியதும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான தேதி முடிவு செய்யப்படும்.

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த வரவேற்பு அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. டாக்காவில் உள்ள புகழ்பெற்ற மைதானத்தில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news