Tamilவிளையாட்டு

லண்டன் காமன்வெல்த் போட்டி நடத்தும் நிர்வாகத்தின் மீது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை புகார்

லண்டனில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், லண்டனில் காமன்வெல்த் போட்டி நடத்தும் நிர்வாகம் மீது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் குற்றம்சாட்டியுள்ளார்.

காமன்வெல்த் கிராமத்தில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டு விட்டார் என லவ்லினா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் போட்டி தொடங்கும் 8 நாட்களுக்கு முன்பே என் பயிற்சி நின்றுவிட்டது. கடந்த முறை உலக சாம்பியன்ஷிப் தொடரின்போது இதே நிலை ஏற்பட்டதால் தொடர் மிக மோசமாக அமைந்தது. தன்னுடைய மற்றொரு பயிற்சியாளர் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு விட்டார். இதையெல்லாம் கடந்து பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் லவ்லினா குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.