Tamilசென்னை 360

ரிப்பன் மாளிகை

அதிகாரப் போராட்டங்கள் அரிதாகவே ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆனால் மெட்ராஸ் கார்ப்பரேஷன் உருவானது அந்த அரிய நிகழ்வுகளில் ஒன்று.

மதராஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் இருக்கும்போது அதன் தலைவர் (அவ்வப்போது பிரெஸிடென்ட், அவ்வப்போது ஆளுநர்) சக்கரவர்த்தி போல் செயல்படுவது சகஜம். மனித அடிமைகளை வாங்கி விற்று வர்த்தகம் செய்த அமெரிக்க வம்சாவழியினர் எலிஹு யேல் மதராஸை எதேச்சதிகாரமாக ஆண்டுகொண்டிருந்த காலமது. (பிற்காலத்தில் அமெரிக்க யேல் பல்கலைக்கழகம் அவரின் நினைவில் பெயரிடப்பட்டது.)

யேலின் சக்திகளைக் கட்டுப்படுத்த மதராஸில் ஒரு மாற்றுச் சக்தி மையத்தை உருவாக்க 1687 ஆண்டில் கார்ப்பரேஷனை உருவாக்கியது கம்பெனியாரின் லண்டன் அலுவலகம். இருப்பினும் வெளிப்படையாக சொன்ன காரணம், ராட்சஸ வேகத்தில் வளர்ந்து வரும் நகரத்திற்கு ஒரு முறையான உள்ளாட்சி அமைப்பு தேவை என்பதுதான். அதுவரை ஓர் அதிகாரி, ஒரு கணக்குப்பிள்ளை மற்றும் பெத்தநாயக்கர் (காவல்துறை) ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டது மதராஸ்.

கோட்டைக்குள் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, கார்ப்பரேஷன் அலுவலகம் பிளாக் டவுனில் உள்ள எரபாலு தெருவில் வாடகைக் கட்டடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டது. நகரம் வளர வளர அதைக் கண்காணிக்கும் நகராட்சியின் மகிமைக்கு ஏற்ப அரசாங்கம் மெட்ராஸ் கார்ப்பரேஷனுக்கு அதன் சொந்த அலுவலகத்தைக் கொடுக்க முடிவு செய்தது.

அதற்கான பெரிய இடம் ஒன்றுக்கு தேடுதல் தொடங்கியது. ஆனால் அவ்வளவு பெரிய இடம் கோட்டைக்குள்ளோ டவுனுக்குள்ளோ இல்லை.

View more at kizhakkutoday.in …