Tamilசெய்திகள்

ராமேசுவரம் கோவிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவிலில் இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் 22 புனித தீர்த்த கிணறுகள், பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வரிசை முறை, பிரகாரங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு வசதிகள், கழிவு நீர் கடலில் கலக்கும் முகத்துவாரத்தின் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளையும் வழங்கினார்.

பின்னர், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்தும், ஒருங்கிணைந்த பெருந்திட்டப்பணிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் அமைச்சர் சேகர்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.