Tamilசென்னை 360

ராஜா அண்ணாமலை மன்றம்

1940களில் மதராஸில் தமிழ் தேசியம் மீண்டும் எழுந்தது. மொழியை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியத் தென்னக இசை போன்ற கலைகள் இந்தச் சர்ச்சையின் முதல் சுற்றில் ஈடுபட்டன.

1931களில் பேசத் தொடங்கிய தமிழ் சினிமா, இசையை மையமாகக் கொண்டிருந்தது. ஒவ்வொரு சினிமாவிலும் இருந்த 50 பாடல்கள், இயங்குவதற்கு மின்சாரம் தேவையில்லாத கிராமபோன் ஒலிப்பதிவுகளால் மாகாணத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவின.

கேட்கும் இசையைப் புரிந்துகொள்ள முடிந்தது என்றவுடன் இசை ரசிகர்களிடமிருந்து முணுமுணுப்புகள் எழுந்தன. ‘சினிமாவில் அதைச் செய்ய முடியுமானால், எல்லா இசைக்கும் ஆணிவேராகக் கருதப்பட்ட பாரம்பரிய இசை ஏன் நமக்குப் புரியும் மொழியில் இருக்கக்கூடாது?’ என்று மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

காரணம். கர்நாடக இசை பெரும்பாலும் தெலுங்கில்தான் பாடப்பட்டது. சங்கீத மும்மூர்த்திகள் இயற்றிய பாடல்களை மட்டும் பாடியபோது, சபா மேடைகளில் தமிழுக்கு மிகக் குறைவான இடமே இருந்தது. கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களைச் சேர்க்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் எழுந்தபோது, அது ஏளனத்துடன் நிராகரிக்கப்பட்டது. மியூசிக் அகாடமியின் கருத்துப்படி தமிழ், இசைக்குத் தகுதியான மொழி இல்லை என்பது தான்.

View more at kizhakkutoday.in