ராஜஸ்தான் விமானப் படை தளம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி ஆர் பி எப் வீரர்கள் இறந்தனர். இதையடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், முக்கிய பொது இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்திற்குள்ளான பகுதிகளில் போலீசார் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை ராஜஸ்தானில் உள்ள நல்பிகானர் விமானப்படை தளம் அருகே நேரடி மோர்ட்டார் குண்டு ஒன்றினை போலீசார் கண்டெடுத்துள்ளனர். இந்த வெடிகுண்டு தொடர்பாக அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேப்போல், பூனேவில் உள்ள பிம்பல்வாடி கிராமத்தில் இன்று காலை சந்தேகத்திற்குள்ளான நபரிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் வெடிமருந்துகள், மற்றும் 59 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools