ரவி சாஸ்திரி தேசிய கிரிக்கெட் அகடாமியில் கவனம் செலுத்த வேண்டும் – கங்குலி கோரிக்கை

சவுரவ் கங்குலி பிசிசிஐ-யின் தலைவராக பொறுப்பேற்ற பின், உள்ளூர் கிரிக்கெட்டை மிகப்பெரிய அளவில் முன்னேற்ற ஆர்வம் காட்டி வருகிறார்.

கிரிக்கெட் வீரர்களை சிறந்த முறையில் உருவாக்க பிசிசிஐ, பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறது. இதன் தலைவராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கங்குலி ராகுல் டிராவிட் உடன் சந்தித்து பேசினார். அப்போது கிரிக்கெட் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி , அவரது பதவிக் காலம் முடியும் வரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் அதிக அளவில் கவனம் செலுத்தலாம் என பிசிசிஐ தலைவர் கங்குலி் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news