Tamilசினிமா

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனுக்கு ரசிகர்கள் உதவி

ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரஜினியின் வீட்டை சோதனை செய்தபோது வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதால் இது வதந்தி என்பது உறுதியானது.

இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையில் கடலூரைச் சேர்ந்த 15 வயது 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் தன்னுடைய தந்தையின் மொபைல் போனை எடுத்து ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சிறுவனை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் அந்த சிறுவனை எச்சரித்துவிட்டு அவருடைய பெற்றோரிடம் எழுதி வாங்கிவிட்டு சிறுவனை விடுவித்தனர்.

இந்த நிலையில் கடலூர் ரஜினி மக்கள் மன்றத்தினர், அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று நிவாரண உதவி செய்ததோடு சிறுவனின் தாய்க்கு ஆறுதல் கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *