Tamilசெய்திகள்

முன் கூட்டியே தமிழக சட்டசபை கூடுகிறது – சபாநாயகர் அப்பாவு தகவல்

நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, சட்டசபை கூட்டத்தொடர் முன் கூட்டியே வரும் 20-ந்தேதி நடைபெறும்.

* அலுவல் ஆய்வு குழு கூடி, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

* விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் சட்டசபை உறுப்பினராக நாளை பதவி ஏற்கிறார் என்றார்.

வருகிற 24-ந்தேதி கூட்டத்தொடர் தொடங்க இருந்த நிலையில் முன்கூட்டியே நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.