Tamilவிளையாட்டு

முன்னாள் வீரர்களின் ஓய்வூதியம் 100 சதவீதம் உயர்வு – பிசிசிஐ அறிவிப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் வீரர்களின் பணத்தேவையைக் கவனித்துக்கொள்வதும், வீரர்களின் கிரிக்கெட் காலம் முடிந்த பிறகும் அவர்களுக்குத் துணையாக இருக்கவேண்டியதும் பிசிசிஐயின் கடைமை. நடுவர்கள் – பாராட்டப்படாத நாயகர்களின் பங்களிப்பை உணர்ந்து ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்களில் 75% பேருக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளோம். இதன்மூலம் 900 பேர் பலனடைவார்கள். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்கள் செலுத்திய சேவைக்கு இதன் மூலமாக நன்றி தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.