Tamilசெய்திகள்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.30,000-ஆக கலைஞர் நூற்றாண்டையொட்டி ஜூன் மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும்.

மேலும் மருத்துவ படி 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் 12,500-ல் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.