Tamilவிளையாட்டு

முன்னாள் இந்திய கால்பந்து அணி வீரர் பார்ச்சுனட்டோ பிரான்கோ மரணம்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் நடுகள வீரரான பார்ச்சுனட்டோ பிரான்கோ கோவாவில் நேற்று மரணம் அடைந்தார். 84 வயதான அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்திய அணிக்காக 26 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பிரான்கோ 1960-ம் ஆண்டில் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார். அத்துடன் 1962-ம் ஆண்டு ஜகர்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் அங்கம் வகித்தார். 1962-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் 2-வது இடம் பிடித்த இந்திய அணியிலும் இடம் பெற்று இருந்தார். மும்பையை சேர்ந்த டாடா கால்பந்து கிளப் அணிக்காக நீண்ட நாட்கள் விளையாடிய அவர் மராட்டிய மாநில அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். பிரான்கோ மறைவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.