Tamilசினிமா

முதல் முறையாக கிராமத்து கதையில் நடிக்கும் சிம்பு

சிம்பு நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாக இருக்கிறது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சுசீந்திரன் கூறிய கிராமத்து கதை ஒன்று சிம்புவுக்கு பிடித்துவிட்டதாகவும் இதனை அடுத்து இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

2004ஆம் ஆண்டு ஹரி இயக்கிய ’கோவில்’ என்ற திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக இருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதையில் சிம்பு நடிக்க உள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.