Tamilசினிமா

முதல் காதல் பற்றி மனம் திறந்த நடிகை லட்சுமி மேனன்

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் கும்கி. படத்தின் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்பட பல படங்களில் நடித்தார்.

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் பல படங்களில் நடித்து வரும் லட்சுமிமேனன் தனது முதல் காதல் பற்றி கூறியதாவது:-

யாரும் என்னை காதலிப்பதாக சொல்லவில்லை. ஆனால் நான் ஒருவரிடம் என் காதலை சொன்னேன். பள்ளியில் படிக்கும் போது எனக்கு பிடித்த ஒருவரிடம் காதலை சொன்னேன். சில நாட்கள் கழித்து என்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தோம்.

குடும்பத்தினருக்கு தெரியாமல் இருப்பதற்காக போர்வைக்குள் இருந்து கொண்டு காதலரிடம் பேசுவேன். சினிமா வாய்ப்புகள் வந்ததால் பள்ளி படிப்பையும் தொடர முடியவில்லை. காதலையும் தொடர முடியவில்லை. அவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக கேள்விப்பட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்பொழுது ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் சப்தம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார், தமன் இசையமைத்துள்ளார்.