Tamilசினிமா

மீண்டும் உலக அழகியான ஐஸ்வர்யா ராய்! – அதிரும் சோசியல் மீடியா

1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்று இந்தியாவை அதிர வைத்த ஐஸ்வர்யா ராய், தற்போது மீண்டும் தனது அழகால் உலகையே அதிர வைத்திருக்கிறார்.

பாரீஸ் பேஷன் வீக் என்ற தலைப்பில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சர்வதேச பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாடல் அழகிகளும், ஹாலிவுட் நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், முன்னாள் உலக அழகியும், இந்திய சினிமாவின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய், தனது மகளுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற ரெட் கார்ப்பட் நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா ராய் பங்கேற்று, தனது ஒய்யாரமான நடையாலும், அழகாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஐஸ்வர்யா ராயின் இந்த நடையையும், அவரது அழகையும் பார்த்து சொக்கிப் போயிருக்கும் ரசிகர்கள் அவருக்கு மீண்டும் ஒரு முறை உலக அழகி பட்டம் கொடுக்கலாம், என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

46 வயதாகும் ஐஸ்வர்யா ராயின், பாரீஸ் பேஷன் ரெட் கார்ப்பட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, ட்விட்டரில் உலக டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது. இதில் அவரது அழகைப் பற்றி பல விதத்தில் புகழ்ந்து வரும் ரசிகர்களின் கமெண்ட்டால் சோசியல் மீடியாவே அதிர்ந்து போயுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *