X

மாவட்ட கலெக்டர்களுடன் 4 நாட்கள் ஆலோசனை நடத்த உள்ள தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா

பாராளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு ஒரு சில நாட்களில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மண்டல அளவில் மாவட்ட கலெக்டர்களை அழைத்து சென்னை தலைமைச் செயலகத்தில் 4 நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளார்.

11-ந்தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி கலெக்டர்கள் பங்கேற்கிறார்கள். 13-ந்தேதி கூட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள் பங்கேற்கிறார்கள்.

ஜூன் 15-ந்தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் மாவட்ட கலெக்டர்களும், 19-ந்தேதி மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி மாவட்ட கலெக்டர்களும் பங்கேற்கிறார்கள்.

குடிநீர் பிரச்சனை, பட்டா மாறுதல், சாலை சீரமைப்பு, தெரு விளக்கு உள்ளிட்ட அனைத்து துறைகளின் முக்கிய திட்டங்கள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார்.