மார்ச் மாதம் வெளியாகும் ‘நரகாசூரன்’

துருவங்கள் 16 படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘நரகாசூரன்’. கவுதம் மேனன் தயாரித்திருக்கும் இந்த படத்தில் அரவிந்தசாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே முடிந்துவிட்ட நிலையில், சில பிரச்சினைகளால் திரைக்கு வராமல் முடங்கி உள்ளது.

இதேபோல் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் கடந்த மாதம் ரிலீசான நிலையில், ரசிகர் ஒருவர் கார்த்திக் நரேனிடம் எனை நோக்கி பாயும் தோட்டா படமே ரிலீசாகி விட்டது, நரகாசூரன் படத்தை எப்போது வெளியிட போகிறீர்கள் என கேட்டார். இதற்கு பதிலளித்த கார்த்திக் நரேன், அடுத்தாண்டு மார்ச் மாதம் ரிலீசாகும் என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools