மாநாடு படம் டிராப்? – தயாரிப்பாளர் விளக்கம்

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் ஜெய் நடிக்க இருப்பதாகவும், ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இப்படம் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்பு தொடங்காததால் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது.

தற்போது இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘படம் கைவிடப்பட்டதாக வரும் வதந்திகளை நிறுத்துங்கள். ஒரு படத்தை தொடங்குவது அவ்வளவு சுலபமானது அல்ல. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools