Tamilசெய்திகள்

மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து – 11 பேர் பலி

மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் பகுதியில் உள்ள கட்லாபூர் காட் எனும் இடத்தில் இன்று காலை நீரில் படகு ஒன்றில் சிலர் பயணம் செய்தனர். ஆழம் அதிகமானதால் படகு தனது பேலன்சை இழந்தது.

இதனால் படகில் பயணம் செய்தவர்கள் நீரில் மூழ்கினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு மீட்பு பணியாளர்களுடன் விரைந்தனர்.

இந்த விபத்தில் 11 பேரின் சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தீவிர தேடுதல் பணியில் மீட்பு பணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *