Tamilசினிமா

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு! – அரசியலில் தீவிரம் காட்டும் விஜய்

சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.

விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில் ஆலோசனை நடைபெற்று உள்ளது.

ஆலோசனை கூட்டத்தில் மாணவரணி, இளைஞரணி, தொண்டரணியினர் கலந்து கொண்டனர்.

திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிர்வாகிகள் மற்றும் கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மகாராஷ்டிராவை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

விரைவில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்ட நிர்வாகிகளையும் நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

தனது மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விஜய் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.