மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலநடுக்கம்

மகாராஷ்டிராவின் சட்டாரா மாவட்டத்தில் இன்று காலை 7.48 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. அதே பகுதியில் இன்று காலை 8.27 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதேபோல் நேற்று மாலை ஒடிசா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools