Tamilசினிமா

மகாராஜா’ இயக்குநரின் அடுத்தப் படத்தின் தலைப்பு ‘மகாராணி’! – நாயகி யார் தெரியுமா?

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் இதுவரை 100 கோடி ரூபாய் மேல் உலகளவில் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் திரைப்படம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் – இல் வெளியாகியது. இந்தியாவில் அதிகமாக பார்த்த படங்களில் மகாராஜா இடம்பெற்றது. இந்தியாவை தவிர பிற வெளிநாட்டு மக்களும் திரைப்படத்தை பார்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நித்திலன் சுவாமிநாதன் அடுத்து இயக்கப் போகும் திரைப்படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நித்திலன் அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மகாராணி என பெயரிடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இப்படத்தை மகாராஜா திரைப்படத்தை தயாரித்த பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது.

இதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் எம்மாதிரியான கதைக்களத்தில் அமையும் என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.