மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் – டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் கைப்பற்றியது

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு தொடங்க உள்ளது. இந்த லீக் தொடர் மார்ச் 4-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. 5 அணிகளும் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் 951 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.

இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிமத்திற்கான தொகை குறித்த தகவல் வெளியாகாத நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா குழுமம் பெற்றுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools