மகளிர் ஆக்கி அணியை பாராட்டிய பிரதமர் மோடி

இந்திய மகளிர் ஆக்கி அணியை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒலிம்பிக்கில் மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்டாலும் பெண்கள் ஆக்கி அணி புதிய இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் அணி சிறந்த நிலையை எட்டியுள்ளது.

அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்களால் முடிந்ததை சிறப்பாக செய்தனர். தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தினர். இந்த சிறந்த அணியால் இந்தியா பெருமை அடைகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெற்ற இந்த வெற்றி இந்தியாவின் இளம் தலைமுறை வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பது முக்கியமானது. இந்திய மகளிர் ஆக்கியை நினைத்து நான் மிகவும் பெருமைபடுகிறேன்.

இந்திய அணியின் சிறப்பான செயல்திறனை எப்போதும் நினைவில் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools