Tamilசெய்திகள்

பொதுமக்கள் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டும் – உலக சுகாதார மையம் அறிவுறுத்தல்

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ஒமைக்கரான் வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. மற்ற நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. அடுத்த 8 நாட்களுக்குள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை வருகிறது. இந்த இரண்டு பண்டிகைகள் வெகுவிமர்சியாக கொண்டாடப்படும்.

பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பொது இடங்களுக்கு சென்று கொண்டாடுவார்கள். பொழுது போக்கான இடங்களில் கட்டுக்கடங்காத வகையில் கூடுவார்கள். இதனால் ஒமைக்ரான் வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகைகளை ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், வாழ்க்கை ரத்தாகி விடுவதைவிட  ஒரு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவது சிறந்தது எனத் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறும்போது ‘‘அமெரிக்காவில் இன்னும சில வாரங்களில் ஒமைக்கிரான் பாதிப்பு ஆதிக்கம் செலுத்தும் என அந்நாட்டு சுகாதா அமைப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் பண்டிகை கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேணடும் அல்லது தள்ளிப்போட வேண்டும். வாழ்க்கை ரத்தாவதைவிட, நிகழ்ச்சி ரத்தாவது சிறந்தது. தற்போது கொண்டாடி விட்டு பின்னர் வருத்தப்படுவதை விட, தற்போது ரத்து செய்து விட்டு பின்னர் கொண்டாடுவது சிறந்தது’’ என்றார்.

தற்போது அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு சராசரி ஒரு லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.