Tamilவிளையாட்டு

பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டிலும் கவனம் செலுத்துவேன் – ரிஷப் பண்ட்

பெங்களூரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலும் நீங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் கடந்த காலத்தில் தவறு செய்துள்ளேன், சில தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளேன்.

மேலும் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறேன். பெங்களூரில் உள்ள கடினமான ஆடுகளத்தில் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொள்வதுடன் விளையாடுவது கடினமாக இருந்தது. எனவே விரைவாக ரன்களை அடிக்க நினைத்தேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அணி நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறதோ அதை நான் செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.