Tamilவிளையாட்டு

புரோ லீக் ஹாக்கிப் போட்டி – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் புரோ லீக் ஹாக்கிப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றன.

போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா,  தென்னாப்பிரிக்காவை எதிர் கொண்டது. விறுவிறுப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் அடுதடுத்து கோல் அடித்து தென்னாப்பிரிக்காவை நிலை குலைய செய்தனர்.

இந்திய இளம் வீரர் ஜுக்ராஜ் சிங் தொடர்ந்து மூன்று கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்திய வீரர்கள் குர்சாஹிப்ஜித் சிங் ,தில்ப்ரீத் சிங்  ஹர்மன்பிரீத் சிங் , அபிஷேக் , மன்தீப் சிங் ஆகியோரும் கோல் அடித்து இந்தியாவை முன்னிலை படுத்தினர்.

தென்னாப்பிரிக்க தரப்பில் 2 கோல்கள் அடிக்கப்பட்டன. ஆட்ட நேர முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை 10-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்தியா இரண்டாவது ஆட்டத்தில் வரும் சனிக்கிழமை பிரான்சை எதிர்கொள்கிறது.