Tamilவிளையாட்டு

புரோ கபடி லீக் – மும்பையை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது டெல்லி

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் யு மும்பா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே டெல்லி அணி சிறப்பாக ஆடியது.

இறுதியில், தபாங் டெல்லி 36 – 30 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தபாங் டெல்லி அணி 9-வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

மற்றொரு போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 32 – 26 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி 4வது வெற்றியை பதிவு செய்தது.