புரோ கபடி லீக் – பெங்கால் வாரியர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது

புரோ கபடி லீக்கின் 7வது தொடரின் இறுதிப்போட்டி குஜராத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தபாங் டெல்லி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகளை குவித்தனர். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் சமனிலையில் இருந்தன.

இரண்டாவது பாதியில் தபாங் டெல்லி அணியினர் தொடர்ந்து புள்ளிகளை எடுத்தனர். ஆனாலும் அவர்களால் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 39-34 என்ற புள்ளிக் கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

சாம்பியன் பட்டம் வென்ற பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடம் பெற்ற தபாங் டெல்லி அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news