புரோ கபடி லீக் – தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அரியானாவின் பஞ்ச்குலாவில் நேற்று இரவு நடந்த 119-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை குவித்தன. ஆனாலும் முதல் பாதி முடிவில் புனேரி பால்டன் அணி முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்பதால் மிகவும் போராடி புள்ளிகளை குவித்தது.

ஆனால் ஆட்டத்தின் கடைசியில் 53-50 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

21-வது ஆட்டத்தில் ஆடிய புனேரி பால்டன் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 19-வது ஆட்டத்தில் ஆடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி சந்தித்த 11-வது தோல்வி இதுவாகும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news