Tamilவிளையாட்டு

புரோ கபடி லீக் – தமிழ் தலைவாஸ் உபி யோத்தா இடையிலான போட்டி டிராவானது

6-வது புரோ கபடி லீக் தொடரில், பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடந்த தமிழ் தலைவாஸ்-உ.பி. யோத்தா அணிகள் இடையிலான பரபரப்பான லீக் ஆட்டம் 25-25 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது. தலைவாஸ் அணி 25-23 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், கடைசி நிமிடத்தில் உ.பி. வீரர் பிரசாந்த் குமார் ராய் ‘ரைடு’ மூலம் அடுத்தடுத்து 2 புள்ளி எடுத்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

பிரசாந்த் குமார் மொத்தம் 12 புள்ளிகள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 12 தோல்வி, 3 ‘டை’ என்று 38 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பையும் இழந்து விட்டது.

இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்-உ.பி. யோத்தா (இரவு 8 மணி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *