Tamilசினிமா

புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு

சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் இயக்கத்தில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்பு நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அவர் இயக்கும் புதிய படத்தில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஹீரோவாக நடிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சுதீப்பை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தையும் இயக்குனர் வெங்கட் பிரபு, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் சுதீப் ஏற்கனவே தமிழில் ‘நான் ஈ’, ‘புலி’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.