புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழைய முடியாது – அமைச்சர் பொன்முடி

புதிய கல்விக்கொள்கை நிச்சயமாக தமிழ்நாட்டில் நுழைய முடியாது என்றும் மாநில உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் செயல்படுவோம் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கையை பற்றி பலமுறை பேசி இருக்கிறேன். என்னுடைய தலைமையில் ஒரு அறிக்கையை தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இப்போது உயர்கல்வித்துறை செயலாளரும் புதிய கல்விக்கொள்கையில் இருக்கக்கூடிய குறைகளை பற்றி ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். அதை எல்லாம் ஆய்வு செய்து நிச்சயமாக மாநில உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் நாங்கள் செயல்படுவோம். புதிய கல்விக் கொள்கை நிச்சயமாக தமிழ்நாட்டில் நுழைய முடியாது என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools