Tamilவிளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நவோமி ஒசாகா விலகல்

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியைச் சமீபத்தில் வென்ற ஜப்பான் வீராங்கனை ஒசாகா அடுத்து நடைபெறவுள்ள பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த மே 24 ஆம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தொடர் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல வீராங்கனை நவோமி ஒசாகா, பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாகத் தன்னால் பிரெஞ்சு ஓபனில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா சமீபத்தில் முதலிடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.