Tamilவிளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச், ரபேல் நடால் 3 வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஒன்றில் உலகின் நம்பர் 1 வீரராக உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சுலோவாக்கியாவை சேர்ந்த அலெக்ஸ் மோல்கனை எதிர்கொண்டார்.

இதில், 6-2, 6-3, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்ற ஜோகோவிச், 3வது சுற்றுக்கு முன்னேறினார்,.

மேலும், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கொரெண்டின் மவுடெட்டை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-1, 6-4 என வெற்றி பெற்ற நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.