பிரியாணி சாப்பிட்டால் உலக கோப்பையை வெல்ல முடியாது – பாக். வீரர்களுக்கு இம்ரான் கான் அறிவுரை

உலகக்கோப்பை போட்டித் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் வீரர்களை தயார் செய்து வருகின்றன. இன்னும் இரு மாதங்கள் இருக்கும் நிலையில், வீரர்களின் உடற்தகுதிக்கு ஒவ்வொரு அணியும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

ஆனால், பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக 50 ஓவர்கள் போட்டியில் கடந்த 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்குப்பின் அந்த அணியால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.

நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியக்கோப்பை என அனைத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. சமீபத்தில் துபாயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-5 என்ற கணக்கில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.

துபாயில் பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல் இருந்தபோதிலும் கூட அந்த அணி வீரர்களின் மோசமான செயல்பாட்டால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. பாகிஸ்தான் அணியில் 6 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும், பாகிஸ்தான் அணியில் இருந்த இளம் வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.

இந்நிலையில், முன்னாள் இடது கை வேகபந்து வீச்சாளரும், கேப்டனுமான வாசிம் அக்ரம் அந்நாட்டு எழுத்தாளர் சாத் சஜிக்குக்கு அளித்த பேட்டியில் வீரர்களின் உடல்தகுதியை விளாசியுள்ளர். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் வீரர்களுக்கு இன்னும் பிரியாணி சப்ளை செய்யப்பட்டு வருகிறது. வீரர்கள் அனைவரும் ருசியாக பிரியாணி சாப்பிட்டால், சாம்பியன்களுடன் போட்டியிட முடியாது. வெற்றி பெறவும் முடியாது.

இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.

உலகக்கோப்பைப் போட்டிக்கான அணியை பாகிஸ்தான் வரும் 18-ம் தேதி அறிவிக்கிறது. இந்திய அணி வரும் 15-ம் தேதி அறிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news