Tamilசெய்திகள்

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கிறார்

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு மாநில முதல் – மந்திரிகள் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2-ந்தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் நடக்கறது.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 7.05 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். காலை 10 மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்றடைந்த அவருக்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி அங்குள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று தங்குகிறார். மதிய உணவுக்கு பிறகு மாலை 3 மணிக்கு பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அதன்பிறகு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

பிரதமரை சந்திக்கும் போது தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி கோருவதற்கான மனுவை அளிப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு இல்லத்தில் இன்று இரவு தங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை சென்னை திரும்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *