Tamilசெய்திகள்

பிப்ரவரி மாதம் சென்னை மெட்ரோ ரெயிலில் 63.69 லட்சம் பயணிகள் பயணம்

சென்னை மெட்ரோ ரெயில்களில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக கடந்த மாதம் 10-ந்தேதி 2 லட்சத்து 61 ஆயிரத்து 668 பேர் பயணம் செய்துள்ளனர்.

கியூ.ஆர். குறியீடு பயணச்சீட்டு முறையை 20 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயன்படுத்தி உள்ளனர். 39 லட்சத்து 85 ஆயிரம் பேர் பயண அட்டைகள் மூலம் பயணம் செய்துள்ளனர். பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் என்பதால் ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.