Tamilசெய்திகள்

பா.ஜ.க-வை சேர்ந்த மேயர்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாடுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க.வை சேர்ந்த அனைத்து மேயர்களும் பங்கேற்க கூடிய கூட்டம் ஒன்றில் இன்று (செப்டம்பர் 20-ம் தேதி) காலை 10.30 மணியளவில் உரையாற்றுகிறார்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வளர்ந்து வரும் நகர்ப்புறமயமாக்கல் சூழலில், நவீன மற்றும் வருங்காலம் சார்ந்த நகரங்களை கட்டமைப்பது மிக அவசியம்.

இதற்கான பணியை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து மேற்கொள்வதற்கும் மற்றும் அதற்கான ஒரு வாய்ப்பாக இதனை நாம் பார்ப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் பதிவிட்டுள்ளார்.