பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர்களுடன் அண்ணாமலை நாளை ஆலோசனை

பாராளுமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை மற்றும் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனால் அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்களுடன் தொகுதி வாரியாக நாளை மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை தொடங்குகிறார். தொகுதி வாரியாக தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் நாளை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனையில் கூட்டணி, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து ஏற்கனவே பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது குறிப்பிட்டத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news