Tamilசெய்திகள்

பாலியல் புகார் – தலைமறைவான பாதிரியார் கைது

குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29), பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பணியாற்றி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவர் தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. குறிப்பாக பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள், ‘வாட்ஸ்-அப் சாட்டிங்’ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவின.

இவர் சில பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை போன்று வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் சில பெண்களிடம் பாதிரியார் ‘வாட்ஸ்-அப்’ மூலம் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவார்.

தலைமறைவான பாதிரியாரை பிடிக்க சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் உத்தரவின்பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.