Tamilவிளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் – வெள்ளிப்பதக்கம் வழங்க கோரி வினேஷ் போகத் கோரிக்கை

பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

இந்நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரையிறுதியில் அவரிடம் 5 – 0 என்ற கணக்கில் மோசமாக தோல்வியடைந்த கியூப வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி பெற்றுள்ளார்.

இதனையடுத்து தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைத்திருந்த வினேஷ், தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.