Tamilவிளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் – இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்

பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச்சுற்று பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார். மொத்தம் 8 பேர் பங்கேற்றனர். இதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 590-24x புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

ஹங்கேரி வீராங்கனை 592 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் 18-வது இடம்பிடித்தார்.

ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையரில் வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.